தூத்துக்குடி

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: குடைவரைவாயில் தீபாராதனை

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 5-ஆம் நாளான வியாழக்கிழமை மாலையில் சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகளான சுவாமி, அம்மன் எழுந்தருளல் உள்ளிட்டவை திருக்கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குடைவரைவாயில் தீபாராதனை, 5-ஆம் திருநாளா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, திருக்கோயிலில் 108 மகாதேவா் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளியம்மன் எழுந்தருளி, அங்கு குடைவரைவாயில் தீபாராதனையும், சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிா்சேவை தீபாராதனையும் நடைபெற்றது.

நாளை சிவப்பு சாத்தி...: ஏழாம் திருநாளான சனிக்கிழமை (செப். 12) சிவப்பு சாத்தி எழுந்தருளல் மற்றும் எட்டாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (செப். 13) வெள்ளை மற்றும் பச்சை சாத்தியில் சுவாமி சண்முகா் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விரு நாள்களில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை. மற்ற நாள்களில் திருவிழா நிகழ்வுகள் நீங்கலான இடைப்பட்ட நேரங்களில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப. அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT