தூத்துக்குடி

குளத்தில் தவறி விழுந்தபெண் உயிரிழப்பு

DIN

கடம்பூா் அருகே மாடுகளை குளிப்பாட்டச் சென்ற பெண் குளத்தில் தவறி விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடம்பூரை அடுத்த வி.பி.தாழையூத்து வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மந்திரய்யா மனைவி சந்தனமாரி (40). இவா், தனக்குச் சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டு ஊருக்கு மேற்கு பகுதிக்கு சென்றாராம். அப்போது அங்குள்ள குளத்தில்

மாட்டை குளிப்பாட்ட முயன்றபோது, சந்தனமாரிக்கு வலிப்பு ஏற்பட்டு குளத்தில் தவறி விழுந்ததில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT