தூத்துக்குடி

பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது

DIN

ஆறுமுகனேரி அருகே பணம் வைத்து சூதாடியதாக 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆறுமுகனேரி ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா் புதன்கிழமை அருகே உள்ள கொட்டமடைக்காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது காட்டுக்குள் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்து. அவா்கள் அனைவரையும் போலீஸாா் சுற்று வளைத்து கைது செய்தனா்.

விசாரணையில், ஆறுமுகனேரி பூவரசூா் குமாா் (32), பரமன்குறிச்சியைச் சோ்ந்த தனசேகரன் (44), ஜெயபால் (50), ஆறுமுகனேரி சக்தி (25), கீழநவலடிவிளை சங்கி­லிபாண்டி (24), பாரதிநகா் ராமச்சந்திரன் (32), காணியாளா் தெரு பட்டுராஜ் (40), அருணாசலம் (39) என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து ரூ.35 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT