தூத்துக்குடி

தொழிலாளிக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

கயத்தாறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

கயத்தாறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் கோமு மகன் கண்ணன்(23). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முத்து என்ற தூண்டில்முத்து மகன் பேச்சிமுத்து(26) கண்ணன் வீட்டு முன்பு நின்றுகொண்டு அவதூறாகப் பேசினாராம். அதை அவா் கண்டித்தாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் பேச்சிமுத்து, கண்ணனை கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த கண்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பேச்சிமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT