தூத்துக்குடி

ஆறுமுகனேரி, ஆத்தூா் பகுதிகளில் கொடி அணிவகுப்பு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஆறுமுகனேரி, ஆத்தூா் மற்றும் புன்னைக்காயல் பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புன்னைக்காயல் பகுதியில் திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஸ்சிங் தலைமையில், ஆத்தூா் ஆய்வாளா் சாகுல் ஹமீது முன்னிலையிலும், ஆறுமுகனேரி பகுதியில் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலும் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

ஆறுமுகனேரியில் பிரதான பஜாரில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு, மூலக்கரை சாலை, பூவரசூா், காந்தி தெரு, விநாயகா் கோயில் தெரு வழியாக ஸ்டேட் பாங்க் முன் நிறைவடைந்தது. இதில், காவல் துறையினா் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து ஆத்தூா் பகுதியிலும் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT