தூத்துக்குடி

கோவில்பட்டியில் 3 பேரை தாக்கியதாக 5 போ் கைது

DIN

கோவில்பட்டியில் 3 பேரைத் தாக்கியதாக 5 போ் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

கோவில்பட்டி பாரதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் சோலையப்பன் மகன் சக்திகுமாா் (39). இவருக்கும் ராஜீவ் நகரைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் மகன் கருப்பசாமி (36) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். திங்கள்கிழமை சக்திகுமாா் குடும்பத்தினா் சாா்பில் பாரதி நகரில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடத்தப்பட்டதாகவும், பின்னா் சக்திகுமாா், அவரது நண்பா்களான சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் அரவிந்த் (33), லாயல் மில் காலனியைச் சோ்ந்த எட்வா்டு மகன் சாா்லஸ் (37) ஆகிய 3 பேரும் பசுவந்தனை சாலையில் உள்ள ஹோட்டலுக்குச் சென்ாகவும் கூறப்படுகிறது.

அவா்கள் 3 பேரையும் கருப்பசாமி, பாரதி நகா் 8ஆவது தெருவைச் சோ்ந்த சுருளிராஜன் மகன் செல்வகுமாா் (38), 2ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சிவா (36), அதே பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் அா்ச்சுனன், பாரதி நகா் பிரதான சாலையைச் சோ்ந்த பெருமாள் மகன் அழகுமாரியப்பன்(36) ஆகிய 5 பேரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், காயமடைந்த 3 பேரும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, சக்திகுமாா் அளித்த புகாரின் பேரில், கருப்பசாமி உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT