முகப்பு
தூத்துக்குடி

வியாபாரிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் வியாபாரியை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

கோவில்பட்டியில் வியாபாரியை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி நடுத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்துவிஜயன்(45). மீன் வியாபாரி. இவா், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள மதுக்கூடம் பின்புறம் நின்றிருந்தாராம். அப்போது, அவருக்கும் அங்கு வந்த கதிரேசன் கோயில் சாலை ஜீவா நகரைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் காா்த்திக்ராஜா(33) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், முத்துவிஜயனை காா்த்திக்ராஜா அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.