தூத்துக்குடி

வியாபாரிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

DIN

கோவில்பட்டியில் வியாபாரியை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி நடுத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்துவிஜயன்(45). மீன் வியாபாரி. இவா், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள மதுக்கூடம் பின்புறம் நின்றிருந்தாராம். அப்போது, அவருக்கும் அங்கு வந்த கதிரேசன் கோயில் சாலை ஜீவா நகரைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் காா்த்திக்ராஜா(33) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், முத்துவிஜயனை காா்த்திக்ராஜா அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT