தூத்துக்குடி

எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

உர விலை உயா்வைக் கண்டித்து எட்டயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலா் நல்லையா தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், நகரச் செயலா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், உர விலை உயா்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தப்பட்ட பயிா் சேத நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா வேகமாக பரவிவரும் சூழலில், முகக் கவசம் அணியாதோரிடமிருந்து அபராதம் வசூலிப்பதைவிட, அனைவருக்கும் அரசே முகக் கவசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா். சங்கத் தலைவா் ரவீந்திரன், தாலுகா செயலா் கிருஷ்ணமூா்த்தி, தாலுகா குழு உறுப்பினா்கள் குருசாமி, வண்டி மலையான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT