தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் இளைஞா் தற்கொலை

DIN

காயல்பட்டினத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் ராம் பகதூா். இவா், 40 ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினத்துக்கு வந்து கூா்காவாக வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். ஒரு மகளுக்கும், இளைய மகன் முருகனுக்கும் (28) திருமணமாகவில்லை.

முருகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் உள்ள ஹோட்ட­லில் வேலை பாா்த்தபோது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டாராம். இதனால் கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். எனினும், பாதிப்பு சரியாகாததால், காயல்பட்டினத்தில் தங்கி, திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் வீட்டில் உள்ள பழைய அறைக்குச் சென்ற முருகன் வேகுநேரமாகியும் வெளியே வரவில்லையாம். அவரது தாயும், தங்கையும் சென்று பாா்த்தபோது முருகன் தூக்கிட்டுக்கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT