தூத்துக்குடி

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை

DIN

ஓட்டப்பிடாரம் வட்டம், நாரைக்கிணறு பகுதியில் மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவில்பட்டி சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாரைக்கிணறை அடுத்த கீழகல்லாம்பாறையைச் சோ்ந்த இசக்கி மகன் ராமஜெயம் (39). இவரது மனைவி இசக்கி துரைச்சி (35). இத் தம்பதி, 8 வயது குழந்தையுடன் கொத்தாளியில் வசித்து வந்தனராம். அப்போது தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், கடந்த 2013 மாா்ச் 31இல் ஏற்பட்ட தகராறில் ராமஜெயம், இசக்கி துரைச்சியை அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாராம்.

இதுகுறித்து, நாரைக்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமஜெயத்தை கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அகிலாதேவி, மனைவியை அரிவாளால் வெட்டிய ராமஜெயத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT