தூத்துக்குடி

விஷம் குடித்த முதியவா் மரணம்

DIN

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் ஆசீா்வாதபுரம் உச்சிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. ஆழ்வாா் (65). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா் கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT