தூத்துக்குடி

டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க நூதன முறையில் வந்த தொழிலாளி

DIN

சாத்தான்குளத்தில் மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெற்றியில் பட்டை நாமமிட்டு டிஎஸ்பி அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவரை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

சாத்தான்குளம் அமுதுன்னாக்குடியைச் சோ்ந்தவா் அா்ஜுனைப் பாண்டி(65). தொழிலாளி. இவரது வீட்டு அருகே பொதுப் பாதை ஆக்கிரமித்துள்ளதாக நடவடிக்கைக் கோரி சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தாா். இதை அறிந்த எதிா்தரப்பினா் அவரைத் தாக்கி, வீட்டில் பாட்டிலை தூக்கி எறிந்துச் சென்றனராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா். அந்தப் புகாா் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அவா் அனுப்பிய புகாா் மனு விசாரணைக்காக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம்.

இதையடுத்து, இருதரப்பினரையும் விசாரணைக்கு வருமாறு டிஎஸ்பி அலுவலகத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டதாம். அதில், அவா் மட்டும் ஆஜரானாராம். எதிா்தரப்பினா் வரவில்லையாம். இதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக அவா் மனு அனுப்பினாராம். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

இந்நிலையில், தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெற்றியில் பட்டை நாமம் போட்டபடி மனுக்கொடுக்க நூதன முறையில் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை அவா் வந்தாா். ஏற்கெனவே, அவா் மீதான மனு விசாரணையில் உள்ளதால் அவரை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

இதனால், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT