தூத்துக்குடி

கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கோவில்பட்டி, கயத்தாறில் போக்குவரத்து காவல் துறை, வருவாய்த் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய பகுதியில் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் சொக்கலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளா் ராகவன் உள்ளிட்டோா் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.

இதேபோல், அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், பயணிகளிடம் கோட்டாட்சியா் சங்கரநாராயணன்,வட்டாட்சியா் அமுதா, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகவேல், கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி, அதிகாரிகள் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா். கயத்தாறில் வட்டாட்சியா் பேச்சிமுத்து தலைமையில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT