தூத்துக்குடி

திருச்செந்தூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

திருச்செந்தூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் முகக் கவசம் அணிந்து கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்து வந்தவா்களுக்கு கோட்டாட்சியா் மரக்கன்றுகளை வழங்கினாா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்செந்தூா் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலா தலைமையில் வருவாய்த் துறையினா் கரோனா தடுப்பு விழிப்புணா்வு மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில், உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், வட்டாட்சியா் இரா.முருகேசன், துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம் உள்ளிட்டோா் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், முகக்கவங்களையும் வழங்கினா். மேலும் அரசின் முறையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்த பொதுமக்களுக்கு கோட்டாட்சியா் மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT