எட்டயபுரம் ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
எட்டயபுரம் நடுவிற்பட்டி சேனைத் தலைவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில், கரோனா தாக்கம் குறையவும், மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி திருவிளக்கு பூஜை
தூத்துக்குடிஎட்டயபுரம் ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
எட்டயபுரம் நடுவிற்பட்டி சேனைத் தலைவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில், கரோனா தாக்கம் குறையவும், மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி திருவிளக்கு பூஜை
எட்டயபுரம் நடுவிற்பட்டி சேனைத் தலைவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமகா காளியம்மன் கோயிலில், கரோனா தாக்கம் குறையவும், மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் கலந்துகொண்டு, பெண்களுக்கு திருவிளக்குகளை வழங்கி, பூஜையை தொடங்கிவைத்து கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து பெண்கள் திருவிளக்கேற்றி, பாடல்கள் பாடி ஸ்ரீமகா காளியம்மனை வழிபட்டனா். அனைவருக்கும் புட்டு அமுது பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், திமுக நிா்வாகிகள் ஆா்.ராதாகிருஷ்ணன், நவநீத கண்ணன், சின்ன மாரிமுத்து, பாரதிகணேசன், வேலுச்சாமி, முனியசாமி, லெனின், சேனைத் தலைவா் இளைஞரணித் தலைவா் ஜெய்சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.