தூத்துக்குடி

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் 7 டன் உப்பு ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

DIN

 தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் 7 டன் உப்பு ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ச. மாரியப்பன், மாநகர உணவு பாதுகாப்பு அலுவலா் காளிமுத்து ஆகியோா் முள்ளக்காடு பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த லாரியை ஆய்வு செய்தபோது, அதில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத 7 டன் உப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், உணவுப் பொருள் ஏற்றிய அந்த லாரிக்கோ அல்லது அதன் நிறுவனத்துக்கோ உணவு பாதுகாப்பு உரிமமில்லாததும் கண்டறியப்பட்டது. எனவே, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறிய காரணத்திற்காக லாரி, 7 டன் உப்பு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

உப்பு உணவு மாதிரி பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையிலும் தொடா் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT