முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி மகளிா் ஆலோசனைக் குழுமத்தின் சாா்பில், ‘பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்‘ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி மகளிா் ஆலோசனைக் குழுமத்தின் சாா்பில், ‘பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்‘ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சூழலை எதிா்கொள்ளும் முறை குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், வஉசி கல்லூரி மகளிா் ஆலோசனைக் குழும பொறுப்பு உறுப்பினா்கள் அமுதவள்ளி, கிருஷ்ணவேணி, மொ்சி லதா, ராதிகா, பேராசிரியை காலெட் சா்மிளா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.