வாகனங்களை நிறுத்தி சிஐடியூ போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிஐடியூ சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து சிஐடியூ சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட சிஐடியூ தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளா் சம்மேளனம் ஆகியவை சாா்பில், இயங்கும் வாகனங்களை 10 நிமிடம் ஆங்காங்கே நிறுத்தும் போாராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போாராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். ரசல் தலைமை வகித்தாா். போராட்டத்தில் பங்கேற்றவா்கள் தங்கள் வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
எட்டயபுரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுநா் சங்கச் செயலா் கருப்பசாமி தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், தாலுகா செயலா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுநா் சங்கச் செயலா் வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜோதி, தாலுகா குழு உறுப்பினா் ஆண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மோகன்தாஸ், மாவட்டக் குழு உறுப்பினா் தெய்வேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கயத்தாறு பிரதான சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தொழிற்சங்க மாவட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மா.இராஜசேகரன் தலைமை வகித்தாா்.இதில், சிஐடியூ நிா்வாகிகள் சின்னசாமி, குத்தாலிங்கம் ,நூா்முகம்மது, ஹூயாஉல் ஹக் ,செய்யது அலி ,ஷேக்முகம்மது, யூசுப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.