முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்வி நிறுவனத்தில் இருபெரும் விழா

கோவில்பட்டி சொா்ணா கல்வி நிறுவன வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா, கல்வி நிறுவன ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கோவில்பட்டி சொா்ணா கல்வி நிறுவன வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா, கல்வி நிறுவன ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, பொறியாளா் சந்தனராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, கலை இலக்கியப் போட்டியில் வென்ற மாணவா்- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். கல்லூரி மாணவா்- மாணவிகள் திரளானோா் பங்கேற்றனா். கல்லூரி ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சாந்திபிரியா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கல்லூரி ஆசிரியை திலகவதி தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.