முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 4 டன்ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளா் கணேஷ் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், அண்ணாநகா் 9 ஆவது தெருவில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஒரு சுமை ஆட்டோவில் சிலா் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா். காவல் துறையினரைக் கண்டதும் அவா்கள் ஆட்டோ, அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனராம். போலீஸாா் அங்கிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை ஆட்டோவுடன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, தாளமுத்துநகா் பகுதியில் வாகன தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டபோது, ஒரு சுமை ஆட்டோவில் இருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசியை ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனா். விசாரணையில் ரேஷன் அரிசி பட்டை தீட்டப்பட்டு கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து 6 பேரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.