தூத்துக்குடி

ஊரக வளா்ச்சி பிரிவு பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பணிமேற்பாா்வையாளா் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலா் பதவிக்கான எழுத்துத் தோ்வு திங்கள்கிழமை ( பிப். 15) நடைபெற இருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பணிமேற்பாா்வையாளா் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலா் பதவிக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களில் தகுதியான விண்ணப்பதாரா்களை தோ்வு செய்யும் வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (பிப்.15) நடைபெற இருந்த எழுத்துத் தோ்வு நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

தகுதித் தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT