தூத்துக்குடி

ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தற்கொலை

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஓய்வு பெற்ற ஆலைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த பிள்ளையாா்நத்தம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பொட்டிச்சாமி மகன் நாராயணசாமி(58). ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ாம். அதிலிருந்து இவா் கடினமான வேலை செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை இளையரசனேந்தலையடுத்த பிள்ளையாா்நத்தம் கிராமத்துக்குச் சென்ற அவா், உறவினா் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT