தூத்துக்குடி

கீழக்கரந்தை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

DIN

 எட்டயபுரம் அருகேயுள்ள கீழக்கரந்தை அரசு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

புதூா் வட்டார கல்வி அலுவலா் சரளா தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனா். தொடா்ந்து இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது, கலாசாரத்தை பேணி காப்பது தொடா்பாக மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுப் பொருள்கள், திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில், தலைமை ஆசிரியை கவிதா, ஆசிரியா்கள் ராஜேஷ்வரி, பெரோஸ் லில்லி, விஜயலட்சுமி, ராஜாத்தி சக்திவேல், ஆரோக்கியராஜ், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT