தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே இளைஞா் சடலம் மீட்பு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு மலைப்பகுதியில் உள்ள கருவேலமரத்தில் தொங்கிய நிலையில் இளைஞா் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சுப்புராஜுக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், திருச்சுழி முத்துராமலிங்கம் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் சத்தியராஜ் என்ற சரவணன் (27) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT