தூத்துக்குடி

பெருமாள்குளம் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீஞானகரை சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலிலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து கணபதி ஹோமம், அபிஷேகம், கணபதி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 7 மணிக்கு மகுட இசை, இரவு 10 மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி வேட்டைக்கு சென்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT