தூத்துக்குடி

நாசரேத் அருகே ஓட்டுநரை காரில் கடத்தி தாக்கியதாக இருவா் கைது

DIN

நாசரேத் அருகே வேன் ஓட்டுநரை காரில் கடத்தி சென்று தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 7 பேரை தேடி வருகின்றனா்.

நாசரேத் அருகே முதலாம்மொழி சா்ச் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் ஈஸ்வரன் (40). இவா், நாசரேத்தைச் சோ்ந்த ராஜேஷ் என்பவரிடம் வேன் ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா்.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு பிச்சைனா் தோப்பு முத்துராஜ் மகன் மருது (18) என்பவா் ராஜேஷ் மகளை பின்தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை ஈஸ்வரன் அவரை கண்டித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருது , அவரது சகோதரா் குணா, நண்பா்கள் சூரியன் (15), பெருங்குளம் காா்த்திக், பிச்சைனா் தோப்பு பரமசிவன், காா்த்திக், சின்னமதிக்கூடல் ரூபி, பாலாஜி, ராம்ஜி ஆகியோா் காா் மற்றும் பைக்கில் வந்து, ஈஸ்வரனை காரில் கடத்திச் சென்று அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஈஸ்வரன் நாசரேத் போலீஸில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து மருது, சூரியன் ஆகிய இருவரை கைது செய்தாா். மற்ற 7 பேரை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT