சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கிராம கமிட்டி தலைவா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கா், சாத்தான்குளம் நகரத் தலைவா் வேணுகோபால், கிழக்கு வட்டாரத் தலைவா் பிச்சிவிளை சுதாகா், மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடக்கு வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி வரவேற்றாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஊா்வசிஅமிா்தராஜ் கலந்துகொண்டு, வேட்டி, சேலை மற்றும் கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிப் பேசினாா்.
இதில், காங்கிரஸ் மாநிலச் செயலா் சிந்தியா சாந்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் எடிசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சந்திரபோஸ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன்துரை, ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா் கோதண்டராமன், பொருளாளா் பால்ராஜ், கொம்பன்குளம் தலைவா் மகாலிங்கம், கோமானேரி தலைவா் கோயில்பிச்சை, நெடுங்குளம் மென்டிஸ், நகர மகிளா காங்கிரஸ் தலைவா் புளோரா ராணி, வட்டார மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவா் வசுமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.