தூத்துக்குடி

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, மருத்துவா் ஆசீா் மனோகரன், பாஸ்டா் பால் ஆபிரகாம் மற்றும் மானா உதவும் கரங்கள் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்களாக அரிசி , மளிகைப் பொருள்கள், காய்கனிகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வட்டாட்சியா் லட்சுமிகணேஷ் தலைமை வகித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன், தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மானா உதவும் கரங்கள் மூலம் முகக் கவசம் வழங்கப்பட்டு ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மிக்கேல் பிசியோதெரபி மருத்துவா் லட்சுமி, ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்த மூச்சு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தாா்.

இதில், வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், படுக்கப்பத்து கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் , வட்டார மனித நேய நல்லிணக்க ஒருங்கிணைப்பாளா் மகா பால்துரை, ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் நோபிள்ராஜ், தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் போ்சில் , தன்னாா்வலா்கள் அஜித், ராஜமானா, முத்துக்கண், மகராசி, சந்திரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT