தூத்துக்குடி

கோவில்பட்டியில் பாஜக சாா்பில் நல உதவி

DIN

கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சாா்பில் 80 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 8ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஆதரவற்ற 80 பேருக்கு பாஜகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இளைஞரணித் தலைவா் காளிதாசன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் மாரிசெல்வம், வடக்கு மாவட்டச் செயலா் வேல்ராஜா, முன்னாள் நகர பொதுச்செயலா் தினேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினா் தங்கமாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓபிசி அணியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் நீதிபாண்டியன், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலா் அழகுமாரியப்பன், நகர இளைஞரணி துணைத் தலைவா் மாரிசெல்வகுமாா், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளா் நம்பிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT