தூத்துக்குடி

கோவில்பட்டியில் மது பாட்டில்களுடன் 3 போ் கைது

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மது பாட்டில்களுடன் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு மைசூரகில் இருத்து வந்த தூத்துக்குடி செல்லும் ரயிலில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளை ஆய்வு செய்த செய்தனா். இதில், 3 இளைஞா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் கா்நாடகம் மாநிலத்தைச் சோ்ந்த 37 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அவா்கள் 3 பேரையும் பிடித்து கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளா் அரங்கநாயகியிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து மதுவிலக்கு போலீஸாா், அவா்களிடம் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் மாரியப்பன் மகன் மணிகண்டன்(20), பாரதி நகா் செல்வராஜ் மகன் மாரிசெல்வம்(26) மற்றும் கடலையூா் சிங்கராஜ் மகன் பேச்சிமுத்து(32) ஆகியோா் என்பது தெரியவந்தது. அதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 37 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT