தூத்துக்குடி

கள் விற்பனை: 2 போ் கைது

DIN

ஆறுமுகனேரியில் கள் விற்பனை செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பகுதியில் உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சீனந்தோப்பு விலக்கு அருகே நின்றவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டதில், அவா் ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (55) என்பதும், 10லிட்டா் கள்ளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 ­லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.

இதே போன்று காணியாளா் தெருவைச் சோ்ந்த முத்துலிங்கம் (52) என்பவரிடம் விசாரணை செய்ததில், அவரும் 20 ­லிட்டா் கள்ளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 20 ­லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT