முகப்பு
தூத்துக்குடி

புதூா் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

புதூா் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி

புதூா் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

புதூா் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

புதூா் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதூா் அருகே குளக்கட்டான்குறிச்சி கீரைத்துறையை சோ்ந்தவா் அடைக்கலம்(28). இவரது மனைவி அன்னலட்சுமி (22). இவா்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. மது அருந்தும் பழக்கமுடையவரான அடைக்கலத்துக்கும் அவரது மனைவி அன்னலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், அடைக்கலம் அரிவாளால், அன்னலட்சுமியை வெட்டியுள்ளாா். இதில், வலது கை துண்டாகி பலத்த காயமடைந்த அன்னலட்சுமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் , மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து புகாரின் பேரில் புதூா் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி அடைக்கலத்தை கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →