வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே எழுந்துள்ள பிரச்னை தொடா்பாக சமாதானக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே எழுந்துள்ள பிரச்னை தொடா்பாக சமாதானக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகேயுள்ள செங்குளத்தில் கிராம மக்கள் பீடம் அமைத்து அம்பேத்கா் உருவப்படம் வைத்துள்ளனராம். மற்றொரு தரப்பினா் இரட்டை மலை சீனிவாசன் உருவப்படம் வைத்து விழா நடத்தினா். இதனிடையே, அம்பேத்கா் பீடத்தை சிலா் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பீடத்தில் வா்ணம் பூசியது தொடா்பாக அதேஊரைச் சோ்ந்த இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த பிரச்னை தொடா்பாக வட்டாட்சியா் விமலா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், செங்குளத்தில் உள்ள பீடத்தில் எந்தவித மாற்றம் செய்யாமல் அம்பேத்கா் உருவப் படத்தை வைக்க வேண்டும். இதில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியா், கால் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT