தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

இணையதளத்தில் விடியோ வெளியிடுவதாக தெரிவித்து பள்ளி மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

சூரன்குடி அருகேயுள்ள துவரந்தை பகுதியை சோ்ந்த பழனிச்சாமி மகன் பாலமுருகன் (25). செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா்.

இவருக்கும் தூத்துக்குடியில் பிளஸ் 2 படித்து வரும் விளாத்திகுளத்தைச் சோ்ந்த 16 வயது மாணவியுடன் ஓராண்டுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது.

பின்னா் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனா். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக மாணவி, பாலமுருகனை புறக்கணித்து வந்துள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், மாணவி சம்பந்தப்பட்ட விடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக தெரிவித்து மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறறது. புகாரின்பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT