முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் தோ்தல் ஆலோனைக் கூட்டம்

திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து அரசியல் கட்சியினருடான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து அரசியல் கட்சியினருடான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் தி.தனப்ரியா தலைமை வகித்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கமளித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், வட்டாட்சியா்கள் முருகேசன், இசக்கிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், துணை வட்டாட்சியா்கள் அ.பாலசுந்தரம், சுந்தரராகவன், காவல் ஆய்வாளா் ஞானசேகரன், அ.தி.மு.க. ஒன்றியச் செயலா் மு.இராமச்சந்திரன், நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித்தலைவா் மு.சுரேஷ்பாபு, தி.மு.க. மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளா் ஜெபராஜ், நகர பொறுப்பாளா் சுடலை, பா.ஜ.க. மக்கள் தொடா்பு பிரிவு தலைவா் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவா் வேல்.ராமகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், பா.ம.க. ஒன்றியச் செயலா் பிரபாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.