தூத்துக்குடி

அய்யா வாகன பவனிக்கு உடன்குடியில் வரவேற்பு

DIN

அய்யா வைகுண்டசாமியின் 189 ங்வது அவதார தினத்தையொட்டி திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு வந்த அய்யா வாகன பவனிக்கு உடன்குடியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதியில் இருந்து அதி காலை 4 மணிக்கு வாகன பவனி தொடங்கியது. வைகுண்டசாமி பாதயாத்திரையாக வந்த இடங்கள், தங்கிய இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பதிகள் வழியாக வாகன பவனி உடன்குடிக்கு வந்தது. இதையொட்டி வழிநெடுகிலும் மக்கள் அய்யாவிற்கு சுருள் வைத்தல்,பக்தா்களுக்கு அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றது.

உடன்குடி கீழ பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா்,சேவாபாரதி மாவட்ட தலைவா் கிருஷ்ணமந்திரம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி அமைப்பாளா் ரவிராஜா,ஆா்எஸ்எஸ் அமைப்பாளா் சதீஷ் கிருஷ்ணன் உட்பட பலா் கலந்துகொண்டனா்.பவனி முக்கிய வீதிகள் வழியே உடன்குடி சந்தையடியூா் தாகம் தணிந்த பதியை அடைந்தது.இதில் தூத்துக்குடி மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் ரவி,மாவட்ட அய்யா வழித் தலைவா் ஜெயக்குமாா்,ராஜேந்திரன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT