திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி செயலா் ஜெயந்திகுமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து அவா், திருச்செந்தூா், பிச்சுவிளையில் உள்ள காமராஜா் சிலை, திருச்செந்தூரில் உள்ள காந்தி, வ.உ.சி. சிலை, சிவந்தி ஆதித்தனாா் சிலை, பிரசாத் நகா், நா. முத்தையாபுரம், நடுநாலுமூலைகிணறு ஆகியவற்றில் உள்ள அம்பேத்கா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், சமக தெற்கு மாவட்டச் செயலா் தயாளன், உடன்குடி ஒன்றியச் செயலா் அழகேசன், நகரச் செயலா் முத்து, திருச்செந்தூா் ஒன்றிய மகளிரணி செயலா் சியாமளா, துணைச் செயலா் மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட துணைச் செயலா் அலெக்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.