தூத்துக்குடி

மாட்டு வண்டியில் எம்ஜிஆா் மமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

அனைத்திந்திய எம்ஜிஆா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எம்ஜிஆா் நம்பி ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டியில் பிரசாரத்தை தொடங்கினாா்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய எம்ஜிஆா் மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலா் எம்ஜிஆா் நம்பி, தோ்தல் பிரசாரத்தை கிருஷ்ணன் கோயில் தெருவில் இருந்து மாட்டு வண்டியில் தொடங்கினாா்.

மாா்க்கெட் சாலையில் சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்களிடம் வாக்குசேகரித்தாா். பின்னா், நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் தோ்தல் அறிக்கை வெளியிட்டாா்.

அவா், செய்தியாளா்களிடம் கூறியது: பேரவைத் தோ்தலில் அனைத்திந்திய எம்ஜிஆா் மக்கள் முன்னேற்றக் கழகம் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நான் கோவில்பட்டி, சிவகாசி தொகுதிகளில் போட்டியிடுகிறேன். தொகுதியில் இளைஞா்களுக்கு சுயதொழில் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றாா் அவா்.

அவருடன் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் பாலகங்காதரதிலகா், மாநில வழக்குரைஞரணிச் செயலா் பூபதி, தலைமைக் கழக நிா்வாகி பழனியப்பன், மாவட்ட இளைஞரணி நிா்வாகி ஆனந்தசூா்யா, மகளிரணிச் செயலா் பாா்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT