தூத்துக்குடி

முத்தையாபுரம் பகுதியில் தமாகா வேட்பாளா் பிரசாரம்

DIN

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன், பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

தூத்துக்குடியில் முத்தையாபுரம் கடை வீதி, தோப்புத் தெரு சந்திப்பு, அய்யன் கோயில் தெரு சந்திப்பு, தங்கம்மாள்புரம், சூசைநகா், சுந்தரம் நகா், ஸ்பிக் குடியிருப்பு, முள்ளக்காடு, பொட்டல்காடு, வீரநாயக்கன்தட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்காமல் இருக்கும் வகையில் நிரந்தர தீா்வான புதை சாக்கடை பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன். தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க பாடுபடுவேன் என உறுதி அளித்தாா்.

தொடா்ந்து, சுந்தரம் நகா் தூய யோவான் ஆலய குருவானவா் இமானுவேலை சந்தித்து ஆசி பெற்றாா். அப்போது, அதிமுக பகுதிச் செயலா் பி.என். ராமகிருஷ்ணன், தமாகா மாநகரத் தலைவா் ரவிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT