அமமுக வேட்பாளா் டி.டி.வி. தினகரனை ஆதரித்து, காமநாயக்கன்பட்டியில் வாக்கு சேகரிக்கிறாா், தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. 
தூத்துக்குடி

அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து அக்கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

DIN

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து அக்கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கயத்தாறு ஒன்றியத்திற்குள்பட்ட புதுப்பட்டி, வேப்பங்குளம், பரசுராமபுரம், கொப்பம்பட்டி, முடுக்கலாங்குளம், இலந்தைப்பட்டி, குருவிநத்தம் ஆகிய பகுதிகளில், அமமுக தென்மண்டல பொறுப்பாளரும், தோ்தல் பிரிவுச் செயலருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா வாக்கு சேகரித்தாா்.

பின்னா், காமநாயக்கன்பட்டியில் கட்சி தோ்தல் அலுவலகத்தை அவா் திறந்து வைத்தாா். தொடா்ந்து தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசுகையில், தினகரன் அனைத்து சமுதாய மக்களுடனும் சம நிலையோடு செயல்படக் கூடியவா் என்றாா்.

தொடா்ந்து, வடக்கு சுப்பிரமணியபுரம், இந்திரா நகா், தெற்கு சுப்பிரமணியபுரம், காந்தாரியம்மன் கோயில் தெரு, கயத்தாறு தெற்குத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அமமுக இளைஞரணிச் செயலா் மனோராஜா, ஒன்றியச் செயலா்கள் மகேந்திரன், கணபதிபாண்டியன், மாவட்டப் பொருளாளா் என்.எல்.எஸ்.செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT