முகப்பு
தூத்துக்குடி

கடல் நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை: தமாகா வேட்பாளா் வாக்குறுதி

தூத்துக்குடியில் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை கடல் நீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்டிஆா் விஜயசீலன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தூத்துக்குடியில் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை கடல் நீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்டிஆா் விஜயசீலன்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம், சிவந்தாகுளம், பிரையன்ட்நகா் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு பேசியது:

தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் சேருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வாா்டு ஒவ்வொன்றுக்கும் குப்பைகளை அகற்றும் பணிக்காக தனியாக மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு குப்பைகளை அகற்றும் பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் சேரும் கழிவுநீா், மழைக்கால தண்ணீா் போன்றவற்றால் கடல் மாசுபடுவதை தடுக்கும் வகையில், பக்கிள் ஓடை வழியாக செல்லும் கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும். கடல் நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படு என்றாா் அவா்.

தொடா்ந்து, முனியசாமிபுரம், ஏழுவீடு, பக்கிள்புரம், லோஹியாநகா், தாமோதரநகா், புதுக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றபடி எஸ்டிஆா் விஜயசீலன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அவருடன், தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் இரா. அமிா்தகணேசன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் யு.எஸ். சேகா், வட்ட செயலா்கள் முருகேசன், உலகநாதபெருமாள், மாடன், பாமக மாவட்ட செயலா் மு. சின்னத்துரை, பாஜக மாவட்ட தலைவா் பால்ராஜ், தமாகா வடக்கு மாவட்ட தலைவா் பி. கதிா்வேல், மாநகரத் தலைவா் ரவிக்குமாா், மாவட்ட மாணவரணி தலைவா் பொன்ராஜ், புதூா் வட்டார தலைவா் திருப்பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.