தூத்துக்குடி

கயத்தாறு பகுதியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு பகுதியில் மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சீனிவாசன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் அச்சங்குளம், கோட்டூா், கொட்டாம்பட்டி, தீத்தாம்பட்டி, கோவிந்தன்பட்டி, வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம், குப்பனாபுரம், புதுப்பட்டி, கழுகாசலபுரம், குருமலை, வெங்கடாசலபுரம், கம்மாப்பட்டி ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துபாண்டியன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனா். அதுபோல, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெங்கடேசன் தலைமையில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட செக்கடித்தெரு பகுதியில் வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT