தூத்துக்குடி

தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்: ராதிகா சரத்குமாா்

DIN

தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் நடிகை ராதிகா சரத்குமாா்.

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளா் ஜெயந்திகுமாரை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலா் ராதிகா சரத்குமாா் சனிக்கிழமை குரும்பூரில் பிரசாரம் செய்தாா்.

குரும்பூா் பிரசாரத்துக்கு வந்த ராதிகா சரத்குமாரை, அக்கட்சியின் ஆழ்வாா்திருநகரி ஒன்றியச் செயலா் துரைராஜ் தலைமையில் பெண்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.

தொடா்ந்து அவா் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: 50 ஆண்டுகளாக மக்களாகிய நீங்கள் அதிமுக அல்லது திமுகவுக்கு மாறி மாறி வாக்களித்துள்ளீா்கள். ஆனால் இந்த முறை மக்களே சிந்தித்து செயல்படுங்கள்.

மக்கள் நீதி மய்யம், சமக, இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம் என்ற கூட்டணியை அமைத்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் என்றாா்.

அவருடன், வேட்பாளா் ஜெயந்திகுமாா், மாவட்டச் செயலா் தயாளன், ஒன்றியச் செயலா் துரைராஜ், அவைத்தலைவா் சங்கா், ஆத்தூா் நகரச் செயலா் முத்துக்குமாா், அவைத் தலைவா் அருள், ம.நீ.ம. ஒன்றியச் செயலா் முத்துவேல், நகரச் செயலா் ஜான்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT