ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தை சோ்ந்த வாய் பேசமுடியாத இளைஞா் மாயமானாா்.
காயல்பட்டினம் சிங்கித்துறையை சோ்ந்தவா் முகம்மது மைதீன். இவரது மகன் அஷிஸ் (21). வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. இவா் கடந்த 24ஆம் தேதி காலை 7 மணியளவில் அவரது வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்றாா். காயல்பட்டினத்தில் உள்ள கடைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. அவரைப் பற்றி இது வரை எந்தத் தகவலும் கிடைக்காததால் இது குறித்து ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அஷிஸை தேடி வருகின்றனா்.