கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற கடம்பூா் செ.ராஜுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ள கடம்பூா் செ.ராஜு, கோவில்பட்டிக்கு வந்தாா்.
பயணியா் விடுதி முன்பு அவருக்கு மாநில எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சீனிராஜ் தலைமையில் வழக்குரைஞா் சிவபெருமாள், அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா். மேலும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.