தூத்துக்குடி: தொடர்ந்து 12 மணி நேரம் நீச்சல் அடித்து சகோதரர்கள் உலக சாதனை
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் பெருமாள் இவர் கேபிள் டிவி ஆப்ரேட்டர் இவரது மகன்கள் விஸ்வநாதன் மற்றும் ராமநாதன் இருவரும் சிறுவயது முத
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் பெருமாள் இவர் கேபிள் டிவி ஆப்ரேட்டர் இவரது மகன்கள் விஸ்வநாதன் மற்றும் ராமநாதன் இருவரும் சிறுவயது முதலே நீச்சல் மீது ஆர்வம் கொண்டு நீச்சல் பயிற்சி எடுத்து வந்துள்ளனர்.
மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
இந்நிலையில் நீச்சலில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்பிய இரண்டு சகோதரர்களும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக புதன்கிழமை தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள நீச்சல் குளத்தில் இரண்டு சகோதரர்களும் முதல் இரண்டு மணி நேரம் கையையும் காலையும் கட்டிக்கொண்டு நீச்சல் செய்தனர்.
Advertisement
Advertisement
பின்னர் தொடர்ந்து 10 மணி நேரம் நீச்சல் செய்து 12 மணி நேரத்தில் 21 கிலோமீட்டர் 250 மீட்டர் வரை நீச்சல் செய்து உலக சாதனை படைத்தார். உலக சாதனை படைத்த இரு சகோதரர்களின் சாதனைகளை அங்கீகரித்து குளோபல் உலக சாதனை புத்தகம் சார்பில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.