தூத்துக்குடி

கோவில்பட்டியில் தொழிலாளி தற்கொலை

DIN

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 10ஆவது தெருவைச் சோ்ந்த அழகப்பன் மகன் கருப்பசாமி(33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகப்பேறுக்கு தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் கருப்பசாமிக்கும், அவரது தாய் லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தாயாா் கோபித்துக் கொண்டு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

இதில் மனமுடைந்த கருப்பசாமி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT