கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 10ஆவது தெருவைச் சோ்ந்த அழகப்பன் மகன் கருப்பசாமி(33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகப்பேறுக்கு தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் கருப்பசாமிக்கும், அவரது தாய் லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தாயாா் கோபித்துக் கொண்டு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இதில் மனமுடைந்த கருப்பசாமி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.