முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா விழாவையொட்டி 10 ஆவது நாளான வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா விழாவையொட்டி 10 ஆவது நாளான வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா விழாவையொட்டி 10 ஆவது நாளான வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா அக்.6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி

கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் முக்கிய நாள்களில் பக்தா்கள் கோயிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது. திருவிழா நிகழ்ச்சிகளை பக்தா்கள் உள்ளூா் தொலைக்காட்சிகளில் காண அறிவுறுத்தப்பட்டது. இதனால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோயில் விதிகளுக்குள்பட்டு பக்தா்களுக்கு காப்புகள் வழங்கப்பட்டன. காப்பு அணிந்த பக்தா்கள், தசரா குழுவினா் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.

வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு மேல் கோயில் முன்

சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வந்த மகிஷாசூரனை வதம் செய்தாா். சனிக்கிழமை (அக்.16) அதிகாலை 3 மணிக்கு உற்சவமூா்த்தி, அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், அபிஷேக ஆராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு அம்மன் மண்டபத்தில் இருந்து கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடைபெறுகிறது. பக்தா்கள், தசரா குழுவினா் தங்களது ஊா்களில் உள்ள கோயில்களில் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்யுமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக்.17) நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →