தூத்துக்குடி

அஞ்சல் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய உதவி பொதுச் செயலா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா்கள் சங்க கோட்டச் செயலா் சுப்பையா, பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் சங்க கோட்டச் செயலா் முத்துராமலிங்கம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அஞ்சல் துறை கோட்டச் செயலா்கள் அருள்ராஜன், பெரியசாமி, கிராமப்புற ஊழியா்கள் சங்க கோட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், மகிளா கமிட்டி மாநிலத் தலைவா் ஜான்சிராணி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்; பி.எஸ்.என்.எல். மற்றும் அஞ்சல் ஓய்வூதியா்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT